திருச்சி எ. புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோபிஷேகபுரம் பகுதி குழு கிளை சார்பில் ஆர்ப்பாட்டம்

Jul 26, 2024 - 09:48
 22
திருச்சி எ. புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோபிஷேகபுரம்  பகுதி குழு கிளை சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சி எ. புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோபிஷேகபுரம்  பகுதி குழு கிளை சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி எ. புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோபிஷேகபுரம்  பகுதி குழு கிளை சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு திருச்சி வருவாய்த்துறையின் மூலம் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறையின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும். எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வாழ்கின்றவர்களுக்கு அந்த பகுதியிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். ஆண்டு கணக்கில் பரிசீலனையில் உள்ள மனுக்களை விரைந்து பரிசீலித்து வீடு வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை மின்சார அளவை கணக்கீடு செய்ய வேண்டும். மின்சாரத்தை தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்குவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோ.அபிஷேகபுரம் பகுதிக்குழு கிளைகள் சார்பில் நேற்று மாலை எடமலைப் பட்டிபுதூர் கடைவீதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். . இதில் நிர்மலா, வீரமணி, சாயிராபானு, சரோஜா, மரியபுஷ்பம், சேட்டு, சீனிவாசன், கலைவாணி, மஞ்சுளா தேவி, சிவக்குமார், கணேசன், சித்ரா, சுப்ரமணி, நஜ்முனிஷா, ஜெய்தூன், ராஜேஸ்வரி, ரமேஷ் நிஷா, குருநாதன், கல்யாணி, நூர்ஜஹான், பழனிவேல், பத்மபிரியா, ராஜேந்திரன், ராஜதுரை, லதா, மீனாட்சி, கலைச்செல்வி பெரியசாமி, சதாசிவம், ராஜேஷ் கண்ணா, காளிமுத்து உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow