சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூர் வித்ய வித்யாலயா பள்ளியின் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

Jun 10, 2026 - 08:19
 12
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூர்  வித்ய  வித்யாலயா பள்ளியின் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ஏத்தாப்பூர் வித்ய வித்யாலயா பள்ளியின் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

 அப்பள்ளி பள்ளிக்கல்வித்துறையின் விதிமுறை பின்பற்றாமல் அலட்சியப் போக்கு. வித்ய வித்யாலயா பள்ளி 2022 இல் இருந்து தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. உலகத்திலேயே மிக உயர்ந்த முருகன் கோவிலுக்கு அருகில் இப்பள்ளி உள்ளதால் இப்பள்ளியின் முன்புறத்தை கடைகளுக்கு வாடகைக்கு விட்டு நடத்தி வருகின்றதால் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பள்ளியின் மேல் நடவடிக்கை எடுக்க கோரி ஏத்தாப்பூர் மக்கள் மன்றம் வாயிலாக மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், முதல்வர் தனிப்பிரிவுகளுக்கும் தொடர்ந்து பலமுறை மனு கொடுத்ததின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் நேரில் ஆய்வு செய்து இப்பள்ளியில் உள்ள 12 குறைகளை நிவர்த்தி செய்யும் அது நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஸ் அனுப்பியும் குறைகளை நிவர்த்தி செய்யாததால் show cash notice 1,2,3 அனுப்பி இக் குறைகளை நிவர்த்தி செய்யாததால் தங்கள் பள்ளிக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்றும், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கு ஏன் மாணவர்களை மாற்றக்கூடாது என்றும் கேட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து நடைபெறும் நிர்வாக சீர்கேட்டினால் அப்பள்ளியின் செயலாளரே சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெட் பெட்டிஷன் போட்டு வழக்கு தொடர்ந்தார், அவ் வழக்கில் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் நான்கு மாதத்திற்குள் இதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார். ஆப்பிளின் செயலாளரே பள்ளியின் நிர்வாக சீர்கேடு குறித்து ஏத்தாப்பூர் மக்கள் மன்ற whatsapp குரூப்பில் பள்ளியில் 2022 முதல் தொடர் அங்கீகாரம் இல்லை என்றும் நிலச்சான்று தாசில்தாரிடம் வாங்கவில்லை என்றும் ஏத்தாப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் கட்டிட சான்று வாங்கவில்லை என்றும் அரசால் நிர்ணயிக்கப்படும் பள்ளி கட்டண நிர்ணய குழுவிடம் அனுமதி பெறவில்லை என்றும் மேலும் இப்பள்ளியின் துணை சேர்மன் தன்னை சேர்மன் என்று கூறி ஏத்தாப்பூர் ஐஓபி வங்கியில் முதல்வர் பெயரில் வங்கி கணக்கு துவங்கி ஒரே நாளில் ஆசிரியர்களுக்கு மூன்று முறை சம்பளம் போட்டு மறுநாளே எடுத்ததின் பேரில் சேலம் எஸ் பி ஆபிஸ் இல் புகார் அளித்து அதைத்தொடர்ந்து அவர் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முன்ஜாமின் காக ஒரு லட்சம் கட்டியும் துணை ஜாமீன் காரர்களாக இரண்டு பேருக்கு தலை ஒரு லட்சம் கட்டியும் ஜாமினில் வெளிவந்து அவர் மீது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்றும் 2019ல் அப்பள்ளியின் நிர்வாக அலுவலர் மற்றும் அறிவியல் ஆசிரியர் ஒரு மாணவனை நீண்ட நேரம் செய்யாத தவறுக்காக விசாரணை நடத்தியதால் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து அவன் இரண்டு கால்களும் உடைந்து விட்டது அப்பொழுது காவல் நிலையத்தில் வழக்கு கொடுக்காத வண்ணம் பெற்றோர்களை மிரட்டியோ பணம் கொடுத்தோ சரி செய்து விட்டார்கள். 2022-ல் பள்ளியின் உறுப்பினர்களை கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக மேல் மாடியில் கட்டிட வேலை செய்யும் பொழுது வேலை செய்பவர் கீழே விழுந்து விட்டார் அது தொடர்ந்து வழக்கு வழக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே பள்ளிக் கல்வித் துறை விதிமுறைகளை பின்பற்றாமலும் நிர்வாகத்தில் உள்ளவர்களை கலந்து கொள்ளாமலும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலர் பள்ளியை முறைகேடாக பயன்படுத்துவதால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் கல்வி முக்கியம் என்ற நோக்கத்துடன் இப் புகார் மனு கொடுத்துள்ளோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow