அடமானம் வைத்து பெற்ற கடனுக்கு நிலத்தை அபகரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிர்வாகியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட குடும்பம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

Jul 19, 2025 - 15:25
 42
அடமானம் வைத்து பெற்ற கடனுக்கு நிலத்தை அபகரித்த  விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிர்வாகியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட குடும்பம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

அடமானம் வைத்து பெற்ற கடனுக்கு நிலத்தை அபகரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிர்வாகியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட குடும்பம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்...... சேலம் பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த மதுமிதா என்பவர் தனது நிலத்தை அடமானமாக வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வசந்த் என்பவரிடம் 7.5 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வசந்த், தனக்குத் தெரியாமல் தனது நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் பிரபு என்பவரின் பெயருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட குடும்பம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் தனது நிலத்தை விலை கொடுத்து வாங்கிவிட்டதாக கூறி அளப்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தனர்.மேலும் தான் கிராம நிர்வாக அலுவலர் என கூறி தன்னை மிரட்டுவதாகவும், இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கேட்டபோது, தான் இடத்தை விற்று விட்டதாகவும் உன்னால் முடிந்தால் காவல் நிலையத்திற்கு சென்று முயற்சி செய் என்றும் பேசியதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மோசடி செய்து நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுத்து பத்திரத்தை ரத்து செய்து வசந்த் மற்றும் பிரபு மீது சட்ட நிதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow