ஐயப்ப சேவா சங்கம் சார்பாக தீபாவளி இனிப்பு வழங்கும் விழா

Oct 23, 2024 - 10:36
 44
ஐயப்ப சேவா சங்கம்  சார்பாக தீபாவளி இனிப்பு வழங்கும் விழா

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியனின் இரண்டாம் சரக சார்பாக இன்று 20.10.24 மாலை 4 மணியளவில் சுருதி மஹாலில் வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு புடவை மற்றும் வேஷ்டி, இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இரண்டாம் சரகத்தைச் சார்ந்த 25 கிளைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 270 பெண்களுக்கும் 75 ஆண்களுக்கும் புடவையும் வேஷ்டி துண்டு இனிப்பு ஆகியவை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு எஸ் பாலசுப்பிரமணியன் அவர்களும் வழக்கறிஞர் ஏ எஸ் சுதர்சன் மற்றும் மூத்த குருசாமி தனசேகர் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு துணிமணிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் திரு முத்து என்கிற ரமேஷ் அவர்கள் தலைமை தாங்க மாவட்ட புரவலர் திரு எம் வி முரளி அவர்கள் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் திரு ஸ்ரீதர் அவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட யூனியனைச் சார்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். மாவட்ட இணைச் செயலாளர் திரு சிதம்பரம் வரவேற்புரை ஆற்றினார். அலுவலக செயலாளர் திரு அம்சராம் நன்றியுரை தெரிவித்தார். நிகழ்ச்சிகளை மாவட்ட பொருளாளர் திரு சுரேஷ் தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை சரகம் 2 நிர்வாகிகள் செய்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow