சேலம் மாநகராட்சியில் பூ வியாபாரிகள் முற்றுகை

Jul 17, 2025 - 16:54
 5
சேலம் மாநகராட்சியில் பூ வியாபாரிகள் முற்றுகை

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பூ வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

 சேலத்தில் பூ மார்க்கெட்டில் கடை வாடகை அதிகளவில் வசூலிப்பதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் சாலை மறியல் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம். நடத்தினார்கள்மேலும் பேரணியாக செல்ல முயன்ற நிலையில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள் அதனால் பூ வியாபாரிகளுக்கும், காவல்துறையினரும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு. ஏற்பட்டது சேலம் மாநகராட்சி பகுதியில் வஉசி பூக்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி ஒவ்வொரு கடைக்கும், மாத வாடகை அதிகமாக வசூலிப்பதால் வியாபாரிகள் குற்றம் சாட்டினர் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் சமாதானம் அடையாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட பூ வியாபாரிகள் பேரணியாக மாநகராட்சி நோக்கி செல்ல முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலர்கள் செய்வதறியாமல் திகைத்தனர் மேலும் இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில்,இதற்கு முன்பாக சேலம் மாநகராட்சியிடம் இருந்து குத்தகைதாரர்கள் கடைகளை ஒப்பந்தம் எடுத்து வியாபாரிகளுக்கு கடைகளை கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது மாநகராட்சியே நேரடியாக வஉசி பூ மார்க்கெட் கடைகளை வாடகைக்கு விட்டு வருகின்றனர். இதற்கு முன்பாக ஷட்டர் உள்ள கடைகளுக்கு 200 ரூபாயும், திட்டு கடைகளுக்கு 100 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது மாநகராட்சி ஷட்டர் உள்ள கடைகளுக்கு 20 ஆயிரமும், திட்டுக்கடைகளுக்கு 15 ஆயிரமும் நிர்ணயித்துள்ளதாகதெரிவித்துள்ளனர். எனவே பழைய முறைப்படி வாடகை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் மாநகராட்சி கடைகளை எடுத்து நடத்தினாலும், பழைய முறைப்படி வாடகையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow