சேலம் தாரமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 'நாளை நமதே தமிழ்நாடு நமதே'தெருமுனை பிரச்சாரம்

Feb 28, 2026 - 15:10
 60
சேலம் தாரமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 'நாளை நமதே தமிழ்நாடு நமதே'தெருமுனை பிரச்சாரம்

சேலம் தாரமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 'நாளை நமதே தமிழ்நாடு நமதே'தெருமுனை பிரச்சாரம்

பாரதிய ஜனதா கட்சி தமிழகம் முழுவதும் 'நாளை நமதே தமிழ்நாடு நமதே' என்ற தெருமுனைப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இக்கூட்டம் தாரமங்கலம் தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.முன்னாள் நிர்வாகி முருகவேல் வரவேற்பு உரையாற்றினார்.இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் எம்ஜிஆர், ராஜேஷ், தாமரைக்கண்ணன்,தனபால்,சங்கர், குமரேசன் ஆகியோர் பேசும் போது, நமது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தாரமங்கலத்தை தலைமையாகக் கொண்டு புது மாவட்டம் உருவாக்கப்படும். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா பெற்றுத் தரப்படும்.தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயத்தில் சிறப்பு பண்டிகை காலத்திலும் கட்டணம் இல்லாத தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.கைத்தறி,விசைத்தறி தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்கள் விரும்பி படிக்கும் கல்லூரி படிப்புவரை இலவசமாக படிக்க வைக்கப்படும். சுற்று வட்டார விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் குறுக்கப்பட்டி ஊராட்சியில் உள்ள பவளத்தானூர் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றி,ஏரியை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow