சேலத்தில் ஆயிரம் பேருடன் மாலை அணிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு தொகுதி மாவட்ட செயலாளர் கி காயத்ரி
சேலத்தில் ஆயிரம் பேருடன் மாலை அணிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு தொகுதி மாவட்ட செயலாளர் கி காயத்ரி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் 234 தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர்களை அறிவித்திருந்தார் இதனுடைய சேலம் தெற்கு தொகுதி மாவட்ட செயலாளர் கி காயத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்
சேலம் அரசு கலைக்கல்லூரி இதிலிருந்து பேரணியாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து கோட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வு உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாகவும் சேலம் மாவட்டம் தெற்கு தொகுதியாக இருக்கக்கூடிய தொகுதியை
தமிழகத்தின் முதன்மை தொகுதியாக மாற்றி வேலைவாய்ப்பையும் அவர்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளையும் மீட்டெடுத்தும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமது பணிகள் இருக்கும்
என்றும் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்தி விதமாகவும் வழியில் பின்பற்றி மக்கள் நலப் பணிகளையும் மக்கள் நல சேவைகளையும் தொடர்ந்து செய்திடுவேன்
பெண்ணாக இருக்க கூடிய எனக்கு மிகப்பெரிய ஒரு நம்பிக்கையாகவும் எனக்கு இந்த வாய்ப்பை தந்துள்ளனர்
தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும்
தெற்குத் தொகுதி மாவட்ட செயலாளருக்கு கீ காயத்ரி அங்குள்ள பொதுமக்களிடமும் தொண்டர்களிடமும் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி நிர்வாகிகள் தொகுதி செயலாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 1000மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்
What's Your Reaction?



