சேலம் டவுன் போலீசில் முக்கிய அரசியல் பிரமுகர் மீது வழக்கறிஞர் புகார்

Jan 9, 2026 - 20:12
Jan 9, 2026 - 20:14
 41
சேலம் டவுன் போலீசில் முக்கிய அரசியல் பிரமுகர் மீது வழக்கறிஞர் புகார்

சேலம் டவுன் போலீசில் முக்கிய அரசியல் பிரமுகர் மீது வழக்கறிஞர் புகார்

சேலம் ஜலால்புரா முத்தவல்லி முகமது யாகூப் தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் முகமதுயாகூப், இவர் சேலம் டவுன் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த ஜனவரி 3ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தேன். பின்னர் மீண்டும் 5ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, என் வீட்டின் சுவர் உடைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அக்கம் பக்கம் விசாரித்ததில் எங்கள் பகுதியில் இறச்சிக்கடைகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் போக்குவரத்து பாதிப்பு குறித்தும், வ.உ.சி மார்க்கெட்டில் மாநகராட்சி மற்றும் அரசு கடைகள் ஒதுக்கித் தராததை கண்டித்தும் சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டிருந்ததை முன் விரோதமாக எடுத்துக்கொண்டு, என்னை அச்சுறுத்தும் நோக்கத்தோடு, சேலம் மாநகரம் 32 வது வார்டு அரசியல் பிரமுகர் துண்டுதலின் பேரில் எனது பக்கத்து வீட்டில் வசிப்பவர்தான் எனது சுவிற்றினை சேதப்படுத்தி உள்ளார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு நாங்கள் அப்படித்தான் செய்வோம், இது சம்மந்தமாக போலீசில் புகார் அளித்தாள் உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அத்துமீறி சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சுவற்றினை உடைத்ததோடு மட்டும் அல்லாமல் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் முக்கிய அரசியல் பிரமுகர் மீது வழக்கறிஞர் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow